வெகு நாட்களுக்கு பிறகு மறுபடியும் இயக்கதில் இறங்கிய எழிலுக்கு வெற்றிமுகமே..........



தொடக்கத்திலிருந்தே நகைச்சுவையுடன் ஆரம்பித்த கதை, மெதுவாக காதல் கதை உணர்வையும் தூண்டியது. காதலுக்காக எதையும் செய்ய துணிந்த அந்த நாலு கிராமத்து ஃப்ரைண்ட்ஸ் படம் முழுக்க அடிவாங்குவது காமெடி. சிங்கம் புலி வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளார்.

படம் முழுக்க காமெடி என்றாலும், ஒரு மெல்லிய காதல் வலியை ரசிகர்களுக்கு புகுத்தியுள்ளார் இயக்குனர். முரட்டு வில்லனையும் காமெடியனாக காட்டியிருப்பது எழிலின் சிறப்பு. பார்த்தவுடன் அனைவரது மனம் கவர்ந்த கதாநாயகி காதல் வந்தும் அதை மறைப்பது அழகு. பாடல் அனைத்தும் முணுமுணுக்க வைக்கிறது. மற்றபடி தன் இசையால் மனதை வருடிய இமான் சூப்பர். மொத்தத்தில் மனம் கொத்திப் பறவை ரசிகர்களின் மனம் கவர்ந்த பறவை.